search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கைது"

    • கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோட்டம்
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை, 

    கோவை பீளமேடு சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). இவர் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் பிடிக்க முயன்றவர்களை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து கண்ணம்மாள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியின் 2 அரை பவுன் செயினை பறித்த வெள்ளலூரை சேர்ந்த ஆகாஷ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 5 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை பிடித்துள்ளனர்.
    • பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி யமுனா (42). தனியார் பள்ளியில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 11-ம்வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த 26-6-2023 அன்று அண்ணாதுரை மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். யமுனா வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விட்டனர். மாலை வீடு திரும்பிய போது அண்ணாதுரை மயக்கமடைந்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யமுனா மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அண்ணாதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணாதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அண்ணாதுரை கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. மேலும் பின்னந்தலையில் காயங்கள் இருந்தது. தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    அண்ணாதுரையின் உறவினர்கள், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என எண்ணினர். இருப்பினும் அண்ணாதுரை சாவில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது அண்ணாதுரை இறக்கும் போது அவருடன் கடைசியாக இருந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் மண்ணரை பகுதியை சேர்ந்த நந்தகோபால் (36) என்பவர் இருந்துள்ளார். எனவே அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது அண்ணாதுரையை கொலை செய்ததை நந்தகோபால் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாதுரைக்கு நந்தகோபால் கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்பதற்காக அண்ணாதுரை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கட்டையால் அண்ணாதுரையின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழவே வீட்டில் இருந்த துப்பட்டாவால் அண்ணாதுரையின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சென்று விட்டார்.

    போலீசார் விசாரணை நடத்திய போது அண்ணாதுரை வீட்டிற்கு நந்தகோபால் வந்து சென்றதுடன், தான் கொலை செய்ததை மறைத்து ஒன்றும் தெரியாதது போல் இருந்து நாடகமாடியுள்ளார். தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார். 5 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை பிடித்துள்ளனர். தொடர்ந்து நந்தகோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காயம் அடைந்த இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நவீனை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா, நவீன் மற்றும் இவர்களது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் பாட்டில்கள், கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நவீனை கைது செய்த போலீசார் மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா மொத்தமாக வாங்கி சிறிய பொட்டலங்களாக தயார் செய்து வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கருங்கல்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராசு (வயது 25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை மதுரவாயல், பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மதுரவாயல் மேம்பாலம் அருகே உள்ள இடத்தில் பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சதிஷ் குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

    சதிஷ்குமார் ஏற்கனவே பலமுறை ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு இவ்வளவு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? ரேசன் கடை ஊழியர்கள் உடந்தையா? யாருக்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணப்பெட்டியில் ரூ.63 ஆயிரம் பணத்தை காணவில்லை.
    • முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரபிக். இவரது மனைவி ஹர்ஷியா (வயது27). இவர் அதேபகுதியில் சிக்கன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டையைச் சேர்ந்த முபாரக் (23) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி வழக்கம் போல் கடையை திறந்த ஹர்ஷியா பணப்பெட்டியை திறந்து பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த ரூ.63 ஆயிரத்தை காணவில்லை. இதுகுறித்து ஹர்ஷியா ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் தனது கடையில் வேலை செய்யும் முபாரக் பணத்தை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் முபாரக்கிடம் விசாரணை நடத்தினர். இதில் முபாரக் பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.61 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆஷிக் ஆசை வார்த்தைகள் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நான் மற்றும் தங்கை, தம்பி ஆகியோர் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறோம். நான் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லும்போது பனியன் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆஷிக் (வயது 19) என்பவர் என்னிடம் நட்பாக பழகினார். இருவரும் அடி க்கடி போனில் பேசி வந்தோம்.

    பள்ளி படிப்பு முடிந்தும் எங்களது நட்பு தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தன்னை காதலிப்பதாக ஆஷிக் கூறினார். முதலில் மறுத்த நான் பின் காதலை ஏற்றுக்கொண்டேன். இந்த நிலையில் எனது தந்தைக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் எனது போனை என்னிடம் இருந்து பறித்து வைத்துக்கொண்டார்.

    சிறிது நாட்கள் கழித்து வேறு ஒரு போன் நம்பரை மாற்றி அதை பயன்படுத்தி வந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நான் என்னிடம் பேச வேண்டாம் என மறுத்து விட்டேன்.

    இந்த நிலையில் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் எனது தந்தை மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் எனது பாட்டியுடன் தங்கி இருந்து வருகின்றனர்.

    நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் நேரடியாக எனது வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார். அப்போது திடீரென என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல் நேற்று முன்தினமும் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் எனது வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எனது சித்தப்பாவிடம் நான் கூறினேன். என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த ஆஷிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    • சிறுமி பலாத்கார வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் தலைமறைவான வாலிபரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள கோப்பம்பட்டிைய சேர்ந்தவர் கணேசன் மகன் உதயராயன்(23). கூலித்தொழிலாளி. இவர் அதேபகுதிைய சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.

    பின்னர் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்றும் உல்லாசமாக இருந்தார். இந்த விபரம் அவரது நண்பர்களுக்கும் தெரிந்தது. பின்னர் தனது காதலியை நண்பர்கள் சிலருக்கும் விருந்தாக்கினார்.

    இதில் சிறுமி கர்ப்பமானார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்ட போதுதான் தனக்கு நேர்ந்த ெகாடுமையை உணர்ந்தார். இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு நேர்ந்த கொடுைமயை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிகிச்சையில் சிறுமிக்கு பிறந்த குழந்தையும் இறந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் உதய ராயன் மற்றும் அவரது நண்ப ரான கொல்ல பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திரவிய கோடீஸ்வரன்(29) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது 3-வது நபராக செங்குளத்துப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் மணிமாறன்(23) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவரும் ஆட்டோ டிரை வராக உள்ளார்.

    போலீசார் தேடி வரு வதை அறிந்து தலைமறை வாக இருந்த மணிமாறனை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    • பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழக்கம்பலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் காரில் சென்றார். தாமரச்சல் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சிறுமியின் தந்தை அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு முகக்கவசம் மற்றும் தலைக் கவசம் அணிந்து வந்த அல்பின் தாமஸ்(வயது33) என்ற வாலிபர், காரில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை உண்மையான துப்பாக்கி போன்று காண்பித்து மிரட்டியுள்ளார்.

    பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதுபற்றி கடையில் இருந்து திரும்பிவந்த தந்தையிடம் சிறுமி தெரிவித்தார். அதுபற்றி அவர் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து சிறுமியை மிரட்டிய அல்பின் தாமசை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோசுக்குறிச்சி கரையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இவருக்கு முத்துலட்சுமி (35) என்ற மனைவியும், நதியா (14) என்ற மகளும் உள்ளனர். நதியா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் ஈஸ்வரனின் தாய் செல்லாயி (75) என்பவரும் வசித்து வந்தார். ஈஸ்வரனுக்கு சொந்தமான வயல் இருந்ததால் அதனை பார்த்துக் கொண்டு பசுமாடுகள் வளர்த்து பால் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

    ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மது குடித்துவிட்டு வருவதை தாய் மற்றும் மனைவி கண்டித்துள்ளனர். அவர்களுடன் ஈஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்று இரவு 11.30 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரனை மனைவி மற்றும் தாய் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அரிவாளால் தனது தாய் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதைப் பார்த்ததும் மனைவி மற்றும் மகள் நதியா ஆகியோர் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான பெரியாண்டி (80) என்பவர் எழுந்து வந்தார். அவரையும் ஈஸ்வரன் அரிவாளால் பயங்கரமாக வெட்டினார். இதில் பெரியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டையும் வெட்டினார். இதைப் பார்த்ததும் மகள் நதியா தடுக்க முயன்றார். இருந்த போதும் அவரது 2 கைகளையும் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் நதியா மயங்கி விழுந்தார்.

    கையில் அரிவாளுடன் தனக்கு எதிரே வந்த அனைவரையும் வெட்ட முயன்றதால் அவர் அருகில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் ஒருவழியாக அவரை பிடித்து கால்களை கட்டினர். அதன் பிறகு நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் தலைமையிலான போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாய் உள்பட 2 பேரை வெட்டி சாய்த்ததுடன் மகளையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
    • வாலிபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நெய்வேலியை சேர்ந்த புவன் கிருஷ்ணன் (வயது 24) என்ற வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். அப்போது புவன் கிருஷ்ணன் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

    அவர் என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் என்னை அவர் திருமணம் செய்ய மறுத்தார். பின்னர் புவன் கிருஷ்ணன் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    இது குறித்து நான் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஏற்கனவே புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னை திருமணம் செய்வதாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தற்போது வரை அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து நான் எனது பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

    எனவே திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த புவன் கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த புவன் கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.
    • பைக்கை பறிமுதல் செய்த போலீசார் துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் அந்த வாலிபரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று செங்கப்பள்ளி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது அவர் அவிநாசி, திருமுருகன்பூண்டியை சேர்ந்த துரைராஜ் (23) என்பதும், பெருமாநல்லுாரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் இவர் தனது பைக்கில் அபாயகரமாக பைபாஸ் ரோட்டில் ஓட்டி சென்று, அதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×